Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேனர் ரெடி...நினைவகம் ஆகிறதா ஜெ.வின் வீடு? - ஓ.பி.எஸ் அதிரடி

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2017 (12:55 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவகமாக மாற்றும் முயற்சியில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


 

 
சசிகலாவிற்கு எதிராக திரும்பியிருக்கும் ஓ.பி.எஸ்-ஸின் அதிரடி நடவடிக்கைகள், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது..
 
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், ஜெ. வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லம், அவரது நினைவகமாக மாற்ற முயற்சி எடுக்கப்படும். அதற்காக ஒரு அறப்போட்டத்தை நாங்கள் துவக்கியுள்ளோம் எனக் கூறினார். 
 
இந்நிலையில், அதற்காக கையெழுத்து இயக்கத்தை ஓ.பி.எஸ் இன்று தொடங்கியுள்ளார். அதேபோல், அவரது வீட்டில் ஒரு பேனரும் தயாராக வைக்கப்பட்டுள்ளது.. 
 
ஆனால், இது போட்டோஷாப் வேலை என சிலரும், இல்லை.. இல்லை.. இது கையெழுத்து இயக்கத்திற்காக வைக்கப்பட்ட பேனர் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது..

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments