இதுக்காக வாடகைக்கு ஆள் வைப்பீர்களா??

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (13:13 IST)
சீனாவில் உள்ள பெய்ஜிங் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், தங்களுக்கு பதிலாக வகுப்புகளைக் கவனிப்பதற்கு வாடகைக்கு ஆட்களை நியமிக்கிறார்கள். 

 
வாரத்துக்கு 5 வகுப்புகள், 2 வாரங்கள், ஒரு மாதம், 6 மாதங்கள் என்று தங்களுக்குப் பதில் வேறு ஆட்களை வாடகைக்கு நியமித்து, வகுப்புகளைக் கவனிக்க வைக்கிறார்கள். வாடகைக்கு வரும் நபர்களுக்கு, மாணவர்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கிறது.
 
தங்களுக்கு பதிலாக வகுப்புக்கு அனுப்பப்படும் வாடகை நபர்களுக்கு, அவர்களின் புகைப்படம் ஒட்டி, போலி அடையாள அட்டைகளையும் வழங்கி விடுகிறார்கள்.
 
ஆங்கிலம், சீனம், தத்துவம் போன்ற வகுப்புகளுக்குத் தான், அதிக அளவில் வாடகை ஆட்கள் அமர்த்தப்படுகிறார்கள். இவ்வாறு வாடகைக்கு வருபவர்கள், மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். 
 
இணையதளங்களில் 700 குழுக்கள் மாணவர்களுக்குப் பதிலாக வகுப்புகளைக் கவனிக்கும் பணிகளைச் செய்து வருகின்றன. ஒவ்வொரு குழுவிலும் 200 முதல் 300 பேர் இருக்கிறார்கள். நிறைய மாணவர்கள் வகுப்பில் இருப்பதால், வாடகைக்கு வந்து அமர்பவர்களைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருப்பதாக அந்நாட்டு பேராசிரியர்கள் கூறுகிறார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments