Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் நாட்டின் முதல் திருநங்கை கால்பந்து நடுவர்: குவியும் வாழ்த்துக்கள்

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (07:52 IST)
இஸ்ரேல் நாட்டின் முதல் திருநங்கை கால்பந்து நடுவர்
இஸ்ரேல் நாட்டின் முதல் திருநங்கை கால்பந்து நடுவர் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
இஸ்ரேல் நாட்டில் முதல் திருநங்கை கால்பந்து நடுவர் என்ற பெருமை சாகி பெர்மன் என்பவர் சொந்தகாரர் ஆகிறார். இவர் இஸ்ரேலில் நடுவராக பணிபுரிந்த கால்பந்து போட்டி சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இஸ்ரேல் நாட்டில் முதல் நடுவர் என அதிகாரப்பூர்வமாக இவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
கால்பந்து போட்டி நடைபெறும் நேரத்தில் ஆடுகளத்தில் பெண்ணிடம் பேசுவதைப் போன்ற வீரர்கள் தன்னிடம் மகிழ்ச்சியாக உரையாடியது தனக்கு மிகுந்த மகழ்ச்சியாக இருந்தது என பெர்மன் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே உலகின் ஒருசில நாடுகளில் திருநங்கைகள் கால்பந்து நடுவர்களாக இருந்தாலும் இஸ்ரேல் நாட்டில் முதன்முதலாக தற்போதுதான் திருநங்கை ஒருவர் கால்பந்து நடுவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

பஞ்சாபியர்களை அச்சுறுத்துவதா.? அமிஷாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்..!!

திருப்பத்தூரில் விழுந்த ‘மர்மப் பொருள்’ விண்கல்லா? - விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments