Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசமாகும் கொரோனா நிலைமை; இந்தியா வர அஞ்சும் வெளிநாட்டு தலைவர்கள்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (12:39 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தனது இந்திய பயணத்தை ரத்து செய்வதாக ஜப்பான் பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் இந்தியாவில் கொரோனா வேகமாக அதிகரித்து வருவதும் இந்தியாவின் இரட்டிப்படைந்த கொரோனா தொற்று மற்ற நாடுகளில் கண்டறியப்படுவதும் உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருமுறை ரத்தான நிலையில் சமீபத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இந்தியா வர இருந்த ஜப்பான் பிரதமர் சுகாவும் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments