Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு அதிக உணவுப் பஞ்சம் ஏற்படும் – அதிர்ச்சியை கிளப்பிய ஐநா அமைப்பு!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (11:28 IST)
கொரோனாவால் இந்த ஆண்டு ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தை விட அடுத்த ஆண்டு அதிக உணவுப் பஞ்சம் ஏற்படும் என உலக உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

நெருக்கடியான சூழல்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டும் விதமாக ஐநாவின் உணவு நிவாரணப் பிரிவுக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலக உணவு அமைப்பின் தலைவர், டேவிட் பியஸ்லி  தற்போது ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் ‘கொரோனா தொற்றால் உலகின் பல பகுதிகளில் உணவுப்பஞ்சம் ஏற்படும் என நாங்கள் எச்சரித்தோம். அதை ஏற்று உலக நாடுகளின் தலைவர்கள் நிதியுதவி, ஊக்கத் திட்டங்கள், கடன் வசூல் நிறுத்திவைப்பு போன்ற சலுகைகளை அவர்கள் அளித்தனர். எனவே இந்த ஆண்டு உணவுப் பஞ்சம் பெரியளவில் தவிர்க்கப்பட்டது. ஆனால் இப்போதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அதனால் 2020-ம் ஆண்டு எங்களுக்குக் கிடைத்த அதே நிதியுதவி அடுத்த ஆண்டு கிடைக்காமல் போகலாம். அதனால் அடுத்த ஆண்டு உணவுப் பஞ்சம் அதிகமாகும் அபாயம் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments