Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீ....மக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (19:25 IST)
ஸ்பெயின் நாட்டில் தற்போது காட்டுத்தீ தீ பரவி வருவதால், 1500க்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பியாவில் உள்ள  ஸ்பெயின் நாட்டில்  பெட்ரோ சான்செஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, கிழக்கு ஸ்பெனியில் உள்ள வாலன்சியா மற்றும் அரக்கோன் ஆகிய பகுதிகளில் சில நாட்களாக காட்டுத் தீ பரவி வரும் நிலையில், இதனால், அப்பகுத்தியைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பிவைத்து வருகின்றனர் பாதுகாப்பு படையினர்.

இந்தக் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் அந்த நாட்டு தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றபோதிலும், அக்காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அடுத்தகட்ட நடவடிக்கையாக ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் பீய்ச்சியடித்து, தீயை அணைத்து வருகின்றனர்.

தற்போது, அங்கு நிலவு வறண்டவானிலை காரணமாகா  காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் பிரேசியில் காட்டுத்தீ பரவியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments