Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அமெரிக்காதான் வளர்த்து விடுகிறது - ரஷ்யா குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 2 ஜூலை 2015 (18:19 IST)
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அமெரிக்கா வளர்த்து விடுகிறது என்று ரஷ்யாவின் துணைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனடோலி அன்டோனோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 

இது குறித்து அவர் கூறுகையில், “சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சியை அகற்றும் நோக்கத்துடன்தான் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அமெரிக்கா வளர்த்து விடுகிறது. மேற்கத்திய நாடுகளின் நிதியுதவி மூலமாகவே ஐ.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது.
 
பிராந்திய கூட்டாளிகளுடன் இணைந்து சிரிய அரசை அகற்ற முனைந்திருக்கிறார்கள். ஒரு பாதி அரசு போன்ற அமைப்பை, அதுவும் பயங்கரவாத அமைப்பை உருவாக்கியுள்ளதை நாங்கள் மிகவும் கவலையோடு பார்க்கிறோம். தங்கள் நாடுகளுக்கு தீவிரவாதிகள் திரும்புகையில், சிரியாவில் கிடைத்த பயங்கரவாத நடவடிக்கைகளில் அனுபவங்களோடு திரும்புவார்கள்” என்றார்.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments