Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரிய அதிபரை அடுத்து சிங்கப்பூர் சென்றார் டிரம்ப்

Webdunia
ஞாயிறு, 10 ஜூன் 2018 (21:17 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் ஆகிய இருவரும் வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நேரில் சந்தித்து அணு ஆயுத குறைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பை உலகமே ஆர்வத்துடன் கவனித்து வருகிறது.
 
இந்த நிலையில் இன்று மதியம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூருக்கு ஏற்கனவே வந்துவிட்ட நிலையில் சற்றுமுன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சிங்கப்பூர் வந்துள்ளார். இருதலைவர்களும் நாளை ஓய்வு எடுத்துவிட்டு நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 
 
அமெரிக்க அதிபரின் சிங்கப்பூர் வருகையை முன்னிட்டு நாளை முதல் அதாவது ஜூன் 11 முதல் 13 வரையிலான மூன்று நாட்களில் சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments