இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

Mahendran
சனி, 18 அக்டோபர் 2025 (15:35 IST)
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இந்தியாவின் ஆதார் டிஜிட்டல் அடையாள திட்டத்தை பாராட்டியதோடு,  இங்கிலாந்து அரசு கொண்டு வரவிருக்கும் "பிரிட் கார்டு" (Brit Card) திட்டத்திற்கு முன்னோடியாக ஆதார் திட்டத்தை கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மும்பைக்கு பயணம் மேற்கொண்ட ஸ்டார்மர், ஆதார் திட்டத்தை வடிவமைத்த நந்தன் நிலேகனியை சந்தித்து, 140 கோடிக்கும் அதிகமான இந்தியர்களை உள்ளடக்கிய இந்த திட்டம் குறித்து விவாதித்தார்.
 
இங்கிலாந்தில் இந்த டிஜிட்டல் ஐடி திட்டத்திற்கு தனியுரிமை மற்றும் அரசாங்க அதிகார அத்துமீறல் குறித்த அச்சங்கள் காரணமாக பொது எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும், ஸ்டார்மர், "பள்ளியில் சேர்க்கை போன்ற பணிகளுக்கான அடையாள சான்றுகளை தேடும் சிரமத்தை குறைக்கும் வசதிக்காக" இந்தத் திட்டம் மக்களிடம் நம்பிக்கையை பெறும் என்று நம்புவதாக கூறினார்.
 
இந்த திட்டத்தை குடியேற்ற அமலாக்கத்துடன் இணைத்து பேசிய ஸ்டார்மர், சட்டவிரோத வேலைகளை தடுப்பது முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு! இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments