Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்தார் நாட்டை கழட்டிவிட்ட அரபு நாடுகள்

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (15:50 IST)
கத்தார் நாடு தீவிரவாத்துடன் தொடர்பில் இருப்பதால் அந்நாட்டுடன் உறவுகளை துண்டித்துக்கொள்வதாக சவுதி அரேபியா, எகிப்து, பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகள் அறிவித்துள்ளன.


 

 
சவுதி அரேபியா தலைமையிலான அரபு கூட்டமைப்பு படைகள், ஏமனில் கிளர்ச்சியாளர்கள், தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன. ஆனால் கத்தார் நாடு அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கத்தார் நாட்டை பிற அரபு நாடுகள் தங்கள் நேச நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கயுள்ளனர்.
 
இதைத்தொடர்ந்து சவுதி அரேபியா நாடு தனது எல்லைகளை மூடிவிட்டதாக தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தில் இருந்து தங்கள் நாட்டை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதுகுறித்து சவுதி அரேபியா அதிகாரி ஒருவர் அளித்துள்ள போட்டியில், கத்தாருடனான தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழி போக்குவரத்து என அனைத்து வழி உறவுகளும் துண்டிக்கப்பட்டுவிட்டது என்றார்.

அரபு நாடுகளை தொடர்ந்து எகிப்து மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளும் கத்தாருடன் தொடர்பை துண்டித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments