Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்ற 11 இந்தியர்கள் கைது

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (11:43 IST)
ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்ற 11 இந்தியர்களை ஐக்கிய அரபு அமிரீக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமிரகத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தொழிலாளியாகவும், அதிகாரிகளாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.அவ்வாறு பணிபுரியும் இந்தியர்களில் 11 பேர் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.இயக்கத்தில் சேர முயன்ற குற்றத்திற்காக அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாகவும், பண உதவி அளித்ததாகவும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமிரக பாதுகாப்பு அமைப்பு தகவலின் படி மேற்கண்ட 11 பேரும் சமூக வலைதளங்களில் இது தொடர்பாக ஆலோசனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 11 இந்தியர்களில் 2 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Show comments