Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென ரூ.40 ஆயிரம் கோடி நஷ்டமடைந்த டுவிட்டர்: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (07:37 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் டுவிட்டர் கணக்கு சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டது என்பதும் அதன் பின்னர் நிரந்தரமாக அவருடைய கணக்கு நீக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
அமெரிக்க தேர்தல் குறித்து தவறான மற்றும் வன்முறையை தூண்டும் விதமான கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் பதிவு செய்து வந்ததால் அவருடைய கணக்கில் நீக்கப்பட்டது என்று டுவிட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்தது
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் டுவிட்டர் கணக்கை நீக்கியதால் டுவிட்டர் நிறுவனத்திற்கு சுமார் 40,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
டிரம்ப் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்கியதால் அந்நிறுவனத்தின் பங்குகள் 12 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாகவும் இதனை அடுத்து அந்நிறுவனத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது
 
இருப்பினும் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பின்னர் டுவிட்டரின் பங்குகள் மீண்டும் விலை ஏறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபரின் கணக்கை நீக்கியதால் சுமார் 40,000 கோடி நஷ்டம் அடைந்த ட்விட்டர் நிறுவனம் குறித்த தகவல் தற்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments