Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை தடுக்க ஆகஸ்டு மாதம் வரை ஆகும் – அதிர்ச்சியளிக்கும் ட்ரம்ப்!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (13:03 IST)
உலகம் முழுவதும் மக்களை பலி கொண்டு வரும் கொரோனாவை முற்றிலுமாக அழிக்க ஆகஸ்டு மாதம் வரை ஆகலாம் என ட்ரம்ப் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதிலும் பரவி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக சீனா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் பெரும் உயிரிழப்பை சந்தித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் 4,661 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பரவுதலை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள மருந்து இன்று அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ”கொரோனாவை தடுக்க அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவை முற்றிலும் தடுக்க ஆகஸ்டு வரை ஆகலாம் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மட்டும் தடுப்பதற்கே ஆகஸ்டு ஆகலாம் என்ற நிலையில் உலகம் முழுவதும் இதை கட்டுக்குள் கொண்டு வர எவ்வளவு நாட்கள் ஆகும்? அதற்குள் எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படும்? என மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments