Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வயது சிறுமி சுட்டதால் 2 வயது குழந்தை பரிதாப பலி

Webdunia
திங்கள், 21 ஏப்ரல் 2014 (17:37 IST)
அமெரிக்காவில் மூன்று வயது சிறுமி ஓருவர் அவரது இரண்டு வயது தம்பியை வயிற்றில் சுட்டதால் அக்குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்பட்டுத்தியுள்ளது. 
 
அமெரிக்காவின் உட்டா பகுதியில் வசித்து வரும்  மூன்று வயது சிறுமி வீட்டில் இருந்த .22 வகை துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த அறைக்கு வந்த அவரது 2 வயது தம்பியை துப்பாக்கி காட்டி மிரட்டிய சிறுமி விளையாட்டுத்தனமாக சுட்டதால் குழந்தையின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. 
 
சத்தம் கேட்டு அந்த அறைக்கு விரைந்த குழந்தைகளின் தாய், உடனடியாக குழந்தையை தூக்கிகொண்டு மருத்துவமனைக்கு சென்றார். முதலில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது, அந்த மருத்துவமனையில் குழந்தை பரிதாபமாக இறந்தது.
 
இச்சம்பவம் குறித்து தெரிவித்த காவல் துறை உயர் அதிகாரி, இச்சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாகவும். ஆனால், பெற்றோர் சிறிது கவனத்தோடு இருந்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்க முடியுமெனவும் கூறினார். 

அமெரிக்காவில் இம்மாதத்தில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இது நான்காவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments