தரையிறங்க இருந்த சரக்கு விமானம் வெடித்து சிதறி 32 பேர் பலி!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2017 (13:30 IST)
கிர்கிஸ்தான் தலைநகர் பைஸ்கெக் விமான நிலையத்தில் இன்று காலை சரக்கு விமானம் ஒன்று தரை இறங்குவதற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, அப்போது எதிபாராதவிதமாக வெடித்து சிதறியது.

 
துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க இருந்த நிலையில் வெடித்து சிதறி மக்கள் தொகை அதிகம் நிறைந்த குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில் 32 பேர் பலியாயினர்.
 
இறந்தவர்கள் அனைவரும் டாச்சா சூ என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஹாங்காங்கில் இருந்து இஸ்தான்புல் வழியாக கிர்கிஸ்தான்தலைநகர் பைஸ்கெக் வந்து கொண்டிருந்தபோது இந்த  சம்பவம் நடந்துள்ளது. 
 
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 4 விமான ஓட்டிகளும் பலியாயினர் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. விமானம் விழுந்ததற்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல் சார் என் வாழ்க்கையில் யுடர்ன் போட்டார்!!. அவரை மறக்கமாட்டேன்!.. வடிவேலு ஃபீலிங்...

15 வயது சிறுமியை டிரம்ப் பாலியல் துன்புறுத்தல் செய்தாரா? எப்ஸ்டீன் மூலம் அறிமுகம் என சிறுமி வாக்குமூலம்..!

2வது குழந்தை பெற்று கொண்டால் ரூ.25,000 ஊக்கத்தொகை.. சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.. தமிழகத்திலும் அறிவிப்பு வருமா?

ஈரான் போரே இன்னும் முடியலை.. அதற்குள் அடுத்த போரை திட்டமிட்ட டிரம்ப்.. சிக்க போவது யார்?

விஜய் ஒரு அரசியல் ஆபத்து!.. இவர் முதல்வர் ஆனா நாடு நாசம்தான்!..

அடுத்த கட்டுரையில்
Show comments