Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஜாஜ் படுக்கை துளைக்குள் தலை சிக்கிய சிறுவன் ! பரபரப்பு சம்பவம்

Webdunia
சனி, 3 ஆகஸ்ட் 2019 (19:56 IST)
சீனாவில் உள்ள ஒரு பிரபல மசாஜ் சென்டரில், மஜாஜ் படுக்கைக்குள் ஒரு சிறுவன் தலை சிக்கிக்கொண்டான். பின்னர்  தீயணைப்புத்துறையினர் வந்து சிறுவனை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பூஜியான் மாகாணத்தில் உள்ள ஷிஷி என்ற ஒரு மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர் உள்ளது. இங்கு தாயுடன் சென்ற 4 வயது சிறுவனை, மசாஜ் அறைக்குள் அமர வைத்தனர்.
 
இந்நிலையில் தாய் அங்கு வருவதற்கு வெகுநேரம் ஆனதாகத் தெரிகிறது.அதனால் சிறுவன் அங்கு உலவத் தொடங்கினான். பின்னர் அங்குள்ள மசாஜ் படுக்கையின்  மீது ஏறிய சிறுவன், தலை வைக்கும் பகுதியில் துளை இருப்பதைப் பார்த்துள்ளான். அதிலிருந்த  பஞ்சுக்கவரை எடுத்துவிட்டு அதற்குள் தலையை விட்டான். ஆனால் அவனால் தலையை வெளியெ எடுக்கமுடியவில்லை. 
 
இதையடுத்து அவன் சத்தமிட்டு கத்தியுள்ளான். அங்கு விரைந்து வந்த ஊழியர்கள் உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சிறுவனின் தலைப் பகுதி மாட்டப்பட்ட மரப்பலகையை வெட்டி சிறுவனை மீட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments