Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசியாவில் தீவிரவாத தாக்குதல்: 6 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2016 (12:05 IST)
இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் அதிபர் மாளிகை அருகே, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


 

 
இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் அதிபர் மாளிகை அருகே, உணவு விடுதிகளில் தாக்குதல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
அங்கு, தீவிரவாதிகள் 6 குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து, தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்த வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில், இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
பாதுகாப்பு படை - தீவிரவாதிகள் இடையிலான துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 
 
சண்டை நடந்துவரும், அப்பகுதியை பாதுகாப்பு படை சுற்றி வளைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments