Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் தண்டனை: தலிபான் பயங்கரவாதிகள்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (15:31 IST)
ஆப்கானிஸ்தான் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் கராக் பாக் என்ற் பகுதியில் வசிக்கும் மக்களிடம் இருந்து ஸ்மார்ட்போன்களை அபகரித்துள்ளனர்.


 

 
ஆப்கானிஸ்தான் கராக் பாக் என்ற பகுதியில் வசிக்கும் மக்களிடம் இருந்து தலிபான் தீவிரவாதிகள் அவர்கள் பயன்படுத்திய ஸ்மார்ட்போன்களை அபகரித்துள்ளனர்.
 
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் அலெம் கான் என்பவர் கூறியதாவது:-
 
தலிபான் பயங்கரவாதிகள் எங்கள் பகுதியில் உள்ள மக்களிடம் இருந்து ஸ்மார்ட்போன்களை பிடிங்கிக்கொண்டனர். குறிப்பாக பாடல்கள் இருந்த மொபைல் போன்களை பிடிங்கிக்கொண்டனர்.
 
ஒவ்வொருவரையும் வழிமறித்து சோதனை செய்தனர். பெரும்பாலான மக்கள் சாதாரண மொபைல் போன்களையே வைத்துள்ளனர். சிலர் வெளிநாடுகளில் உள்ள அவர்களது உறவினர்களிடம் பேசுவதற்கு ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்கின்றனர்.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
மேலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பயங்கரமாக தண்டிக்கப்படுவார்கள் என்று தலிபான் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments