Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை சுடும் உரிமை எங்களுக்கு உள்ளது - இலங்கை அமைச்சர் சாமிநாதன்

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2015 (14:48 IST)
எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை எங்கள் பாதுகாப்புக்காக சர்வதேச சட்டப்படி துப்பாக்கியால் சுடும் உரிமை உள்ளது என்று இலங்கை அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
 
இன்று காலை சென்னை வந்த இலங்கையின் மறு சீரமைப்பு மற்றும் மறு வாழ்வுத்துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது அவர் கூறுகையில், இலங்கையில் இருந்து வெளியேறிச் சென்று, பிற நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் மீண்டும் இலங்கைக்கு வந்தால் அவர்களை வரவேற்க தயாராக உள்ளோம். மீனவர்கள் பிரச்சனையை தீர்ப்பது இந்தியாவின் கையில்தான் உள்ளது. தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள்.
 
எல்லை தாண்டும் மீனவர்களை இந்திய அரசு தான் கட்டுப்படுத்த வேண்டும். எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை எங்கள் பாதுகாப்புக்காக சர்வதேச சட்டப்படி துப்பாக்கியால் சுடும் உரிமை உள்ளது என்று கூறினார்.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

Show comments