Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (20:00 IST)
சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனா, அந்நாட்டின் நாடாளுமன்றத்தை திடீரென கலைத்தார். இதனையடுத்து வரும் ஜனவரியில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்ததை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இலங்கை உச்சநீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு, நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நாளையே நாடாளுமன்றத்தை கூட்டினாலும், பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்

இந்த நிலையில் இலங்கை உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து, ராஜபக்சே அணியினர் வரும் 19ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

ராகுல், கார்கே பேசவில்லையா? நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை..!

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் விலை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments