Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை முழுவதும் திடீர் மின்சார தடை

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (00:04 IST)
இலங்கை முழுவதும் திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று (03) மதியம் 12 மணியளவில் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டது.
 
பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன கூறியுள்ளார்.
 
இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், கொழும்பின் சில பகுதிகளுக்கு மாத்திரம் மின் விநியோகம் தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
 
ஏனைய பகுதிகளுக்கான மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர மேலும் சில மணிநேரம் எடுக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது. இதேவேளை, மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளமையினால், நாட்டின் சில பகுதிகளுக்கான நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.
 
மேலும், மின்சாரம் தடைப்பட்டுள்ளமையினால், வீதி சமிக்ஞை விளக்குகள் செயலிழந்துள்ள நிலையில், பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன். ரயில் சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்துள்ளமையினால், ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments