Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாசாவை ஓரங்கட்டிய எலன் மஸ்க்

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (14:11 IST)
ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் உலகிலேயே பெரிய ராக்கெட்டை விண்வெளியில் ஏவ இருக்கிறது. 

 
நாசா விண்வெளி துறையில் பல முக்கியமான காரியங்களை செய்து வருகிறது. இந்தியாவின் இஸ்ரோ, சீனா, ரஷ்யா உள்பட பல உலக நாடுகள் விண்வெளி துறையில் முக்கிய பங்காற்றி வருகிறது.
 
வெளியே தெரியாத சில தனியார் நிறுவனங்களும் விண்வெளி துறையில் சில காரியங்களை செய்து வருகின்றனர். அதில் ஒன்று ஸ்பேஸ் எக்ஸ். அமரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் என்பவருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகிலேயே பெரிய ராக்கெட்டை இன்று விண்வெளியில் ஏவ உள்ளது.
 
இந்த ராக்கெட்டுக்கு ஃபல்கான் ஹெவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2.00 மணிக்கு மேல் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகிலேயே சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும். இதன் மூலம் மனிதர்களை எளிதாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப முடியும் என்று கூறப்படுகிறது.
 
தற்போது இந்த ராக்கெட் எந்த ஒரு காரணத்துக்காகவும் அனுப்பப்படவில்லை. எதிர்காலத்தில் இதை குறிப்பிட்ட காரணங்களுக்காக அனுப்ப திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments