Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாசாவை ஓரங்கட்டிய எலன் மஸ்க்

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (14:11 IST)
ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் உலகிலேயே பெரிய ராக்கெட்டை விண்வெளியில் ஏவ இருக்கிறது. 

 
நாசா விண்வெளி துறையில் பல முக்கியமான காரியங்களை செய்து வருகிறது. இந்தியாவின் இஸ்ரோ, சீனா, ரஷ்யா உள்பட பல உலக நாடுகள் விண்வெளி துறையில் முக்கிய பங்காற்றி வருகிறது.
 
வெளியே தெரியாத சில தனியார் நிறுவனங்களும் விண்வெளி துறையில் சில காரியங்களை செய்து வருகின்றனர். அதில் ஒன்று ஸ்பேஸ் எக்ஸ். அமரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் என்பவருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகிலேயே பெரிய ராக்கெட்டை இன்று விண்வெளியில் ஏவ உள்ளது.
 
இந்த ராக்கெட்டுக்கு ஃபல்கான் ஹெவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2.00 மணிக்கு மேல் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகிலேயே சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும். இதன் மூலம் மனிதர்களை எளிதாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப முடியும் என்று கூறப்படுகிறது.
 
தற்போது இந்த ராக்கெட் எந்த ஒரு காரணத்துக்காகவும் அனுப்பப்படவில்லை. எதிர்காலத்தில் இதை குறிப்பிட்ட காரணங்களுக்காக அனுப்ப திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments