Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்வெளி நிலையத்தில் இருந்து நாசா வீரர்களுடன் பூமிக்கு திரும்பிய விண்கலம்

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (22:01 IST)
உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்திற்கு 4 வீரர்களுடன் சென்றது.

இந்த விண்வெளி மையத்தில், 4 வீரர்களும்  6 மாத காலம் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தனர்.  இந்த நிலையில் ஆய்வுப் பணி முடிந்து 4 வீரர்கள் பயணித்த விண்கலம்  நேற்று  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் கடலில் தரையிறங்கியது.

விண்வெளி  மையத்தில் இருந்து புறப்பட்ட சுமார் 5 மணி நேரத்திற்குப் பின் புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள கடலில் பாராசூட்டின் மூலம் இறங்கியது.

இந்த நிலையில் தற்போது விண்வெளி மையத்தில், 3 அமெரிக்க வீரர்களும், 3 ரஷியர்களும்,  1 ஜப்பானியர் என 7 பேர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments