Webdunia - Bharat's app for daily news and videos

Install App

71 வயது பாட்டிக்கும் 16 வயது சிறுவனுக்கும் காதல் ; பெற்றோர்களை மிரட்டி திருமணம்

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (12:00 IST)
இந்தோனேசியாவில் 71 வயது பாட்டியுடன் காதல் கொண்ட 16 வயது சிறுவன்,  தற்கொலை செய்துகொள்வோம் என பெற்றோரை மிரட்டி , அந்த பாட்டியை திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.


 

 
இந்தோனேசியாவில் சுமத்ரா பகுதியில் வசிப்பர் ரோஹாயா. இவருக்கு வயது 71. இவர் ஏற்கனவே இருமுறை திருமணம் செய்து தனது கணவர்களை இழந்தவர் ஆவார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலமாத் ரயாதி என்ற 16 வயது சிறுவனுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
 
ஆனால், வயது வித்தியாசம் காரணமாக அவர்களின் காதலை சிலமாத்தின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், வயதான மூதாட்டியுடனான காதலை கைவிடும்படியும் கண்டித்துள்ளனர். ரோஹாயா குடும்பத்திலும் இதற்கு எதிர்ப்பு இருந்தது. ஆனால், தனது காதலில் உறுதியாக இருந்த இருவரும், தங்களுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை எனில், நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டியுள்ளனர்.
 
இதனால் வேறு வழியின்றி இரு வீட்டினரும் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். மேலும், அந்த திருமணத்திற்கு கிராமத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 
 
அதோடு, இருவரில் யார் முதலில் இறந்தாலும், மற்றொருவரும் இறந்துவிடுவோம் என அவர்கள் இருவரும் சத்தியபிரமாணமும் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடு..! சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பு.!

அப்பா... உங்களது கனவுகள், எனது கனவுகள்.. ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் ராகுல் காந்தி உருக்கம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி இருக்கா.? பதிலளிக்க கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தேங்கிய மழை நீர்! வெளியேற கட்டமைப்பு இல்லையா?

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

அடுத்த கட்டுரையில்
Show comments