Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு! 3 பேர் பலி

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (21:57 IST)
அமெரிக்க நாட்டின் விர்ஜீனிய பல்கலைக்கழக வளாகத்தில்  நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

அமெரிக்க நாட்டில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பள்ளி  மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் பிரச்சித்தி பெற்ற பல்கலைக்கழமான விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில்,  நேற்றிரவு புகுந்த பல்கலைக்கழக மாணவர் கிரிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் என்பவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 2 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியவரின் புகைப்படத்தை போலீஸார் பொதுமக்களுக்கு வெளியிட்டி வலைவீசித் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் வகுக்குகள் சில நாட்களுக்கு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments