Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35 ஆண்டுகள், 93 கொலைகள்.. அலறவைத்த கொலைகாரன்

Arun Prasath
வியாழன், 10 அக்டோபர் 2019 (14:34 IST)
35 ஆண்டுகளில் 93 பெண்களை கொலை செய்ததாக ஒரு கொடூர கொலைகாரன் ஒப்புக்கொண்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் குத்துச் சண்டை வீரரான சாமுவேல் லிட்டில், கடந்த 2012 ஆம் ஆண்டு போதை பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை விசாரித்த போது, மரபணு சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் 1987 ஆம் ஆண்டிலிருந்து 1989 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 3 பெண்களை அவர் கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

மேலும் சில சந்தேக கொலைகள் குறித்து விசாரணை நடத்தியதில், 1970 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரையில் 93 கொலைகளை தாம் செய்துள்ளதாக சாமுவேல் ஒப்புக்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கொலை செய்த பெண்களில் கறுப்பின பெண்களும், பாலியல் தொழில் மற்றும் போதைக்கு அடிமையான பெண்களுமே அதிகம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்