Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வூகான் சந்தையா? ஆய்வகமா? கொரோனா பரவியது எங்கிருந்து? – ஆய்வில் கண்டுபிடிப்பு!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (11:34 IST)
கொரோனா பரவல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதன் தோற்றம் குறித்து தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2019 இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் வூகானில் உள்ள ஹூனான் மார்க்கெட்டிலிருந்து பரவியதாக கூறப்படுகிறத். வௌவ்வாலில் இருந்து வேறொறு பாலூட்டி விலங்கு வழியாக இந்த வைரஸ் மனிதர்களை வந்தடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் மற்றொரு தரப்பு இது வூகானில் உள்ள ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரஸ் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு ஆய்வு மேற்கொண்டது.

இந்நிலையில், விஞ்ஞானிகள் சிலர் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்று 3 ஆய்வுகளை நடத்தினர். அவற்றின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அவற்றில் 2 ஆய்வுகளில், உகான் நகரில் உயிருடன் பாலூட்டி ரக விலங்குகளை விற்கும் ஹூனான் மொத்த மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா பரவியதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மரபணு பகுப்பாய்வு மூலம் இதை கண்டறிந்து, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர். எனினும் சில விஞ்ஞானிகள் இந்த ஆய்வு முடிவுகளை ஏற்காமலும் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments