Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பிரதமராக பதவியேற்கின்றாரா ரணில் விக்ரமசிங்கே ?

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (10:06 IST)
இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்ப நிலை நிலவி வரும் நிலையில் இன்று அல்லது நாளை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இலங்கை பிரதமராக இருந்த ரணிலை திடீரென நீக்கிய அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமனம் செய்தார். ஆனால் சமீபத்தில் கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அல்லது நாளை மீண்டும் ரணில் பிரதமர் பதவியை ஏற்கவுள்ளதாக இலங்கையின் முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதற்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரணில் மீண்டும் பிரதமர் ஆனால் தான் ஒரு நாள் கூட அதிபர் பதவியில் இருக்க மாட்டேன் என்று சிறிசேனா ஏற்கனவே கூறியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments