Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”தாடி இருந்தால் வேலை இல்லை” என கூறிய ஹோட்டல்; 6 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பு

Arun Prasath
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (14:18 IST)
லண்டனில் தாடி இருந்ததால் வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு 7 ஆயிரத்து 102 பவுண்டு இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் நடத்திய நேர்காணலில் நியூசிலாந்தைச் சேர்ந்த சீக்கியரான ராமன் சேதி என்பவர் கலந்துகொண்டார். அப்போது அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க மறுத்துவிட்டனர்.

இதனை தொடர்ந்து ராமன் இது குறித்து லண்டன் வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், “ஹோட்டலில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ தாடி வைத்திருக்ககூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே ஹோட்டல் நிர்வாகம் ராம் சேதிக்கு 7 ஆயிரத்து 102 பவுண்ட், அதாவது இந்திய மதிப்புபடி 6 லட்சத்து 67 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்” என தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments