Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”தாடி இருந்தால் வேலை இல்லை” என கூறிய ஹோட்டல்; 6 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பு

Arun Prasath
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (14:18 IST)
லண்டனில் தாடி இருந்ததால் வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு 7 ஆயிரத்து 102 பவுண்டு இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் நடத்திய நேர்காணலில் நியூசிலாந்தைச் சேர்ந்த சீக்கியரான ராமன் சேதி என்பவர் கலந்துகொண்டார். அப்போது அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க மறுத்துவிட்டனர்.

இதனை தொடர்ந்து ராமன் இது குறித்து லண்டன் வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், “ஹோட்டலில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ தாடி வைத்திருக்ககூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே ஹோட்டல் நிர்வாகம் ராம் சேதிக்கு 7 ஆயிரத்து 102 பவுண்ட், அதாவது இந்திய மதிப்புபடி 6 லட்சத்து 67 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்” என தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments