Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டத் திருத்தம்; பிரிட்டனில் வலுக்கும் எதிர்ப்பு

Arun Prasath
திங்கள், 16 டிசம்பர் 2019 (10:33 IST)
இந்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரிட்டனில் இந்திய தூதரகம் முன்பு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுபெற்று வருகின்றன. மேலும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு பல பிரிவுகளை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பிரிட்டனில் வாழும் அஸ்ஸாம் சமூகத்தினர், பாரம்பரிய உடை அணிந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments