Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசானில் பன்றிக்கு பாலூட்டிய பழங்குடி பெண்: வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (16:53 IST)
பெண் ஒருவர் பன்றிக்குட்டிக்கு பாலூட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
மூன்று வாரங்களுக்கு மேலாக அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை கட்டுப்படுத்த பிரேசில் அரசு போராடி வருகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்கலில் பெண் ஒரு பன்றிக்கு பாலூட்டும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 
 
இந்த புகைப்படத்துடன், அமேசான் காடுகள் பற்றி எரியும் நிலையில் பழங்குடி பெண் ஒருவர் காட்டுப் பன்றியின் குட்டிகளுக்கு பாலூட்டி பசியை போக்கியுள்ளார் என்ற செய்தியும் வைரலாகிறது. இந்த புகைப்படம் குறித்த உண்மை பின்வருமாறு... 
இந்த புகைப்படத்தில் இருப்பது போல் பழங்குடி பெண் பால் கொடுத்தது உண்மைதான். ஆனால் அது இப்போது நடந்தது அல்ல அமேசான் பகுதியில் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த நிகழ்வை இப்போது அமேசான் காட்டுத்தீயுடன் இணைத்து வைரலாக்கி வருகின்றனர். 
 
ஆனால், அமேசானின் முரா பழங்குடியினர் தாங்கள் புனிதமானதாக கருதும் வனத்தைக் காக்க, இறுதிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம் என உறுதிபூண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments