Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெஷாவர் தாக்குதலைத் திட்டமிட்டவர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்

Webdunia
சனி, 27 டிசம்பர் 2014 (06:34 IST)
ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்தியுள்ளத் தாக்குதல்களில், திவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதில் முதல் தாக்குதல் வடக்கு வாசிரிஸ்தான் பகுதியிலுள்ள குண்ட் கிராமத்திலுள்ள பஞ்சாபித் தாலிபான்கள் இருந்த வளாகத்தின் மீது நடத்தப்பட்டது.
 
அதில் நால்வர் கொல்லப்பட்டனர். பின்னர் அதே பகுதியில் உஸ்பெக் தீவிரவாதிகள் தங்கியிருந்த ஒரு வளாகத்தின் மீது நடந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.
 
இதனிடையே கைபர் மாகாணத்தின், பாராப் பிராந்தியத்தில், தமது படைகளும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதில் இந்த மாதம் பெஷாவரிலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைத் திட்டமிட்டவர் என்று சந்தேகிக்கப்படுபவரும் துப்பாக்கிச் சூட்டுச் சண்டையில் கொல்லப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments