Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெஷாவர் தாக்குதலில் இறந்தது போல நடித்து உயிர் பிழைத்த மாணவன் கூறிய திடுக்கிடும் தகவல்கள்

Webdunia
புதன், 17 டிசம்பர் 2014 (13:16 IST)
எங்கள் பள்ளியில் சுமார் 500 மாணவ–மாணவிகள் படித்து வந்தோம். சில வகுப்பு மாணவர்களுக்கு பரீட்சை நடந்து வருகிறது.
 
எங்கள் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று ஆலோசனை வழிகாட்டி வகுப்பு நடத்தப்பட்டது. ஆசிரியர் ஒருவர் எங்களுக்கு மேல்படிப்புக்கான ஆலோசனைகளை சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென எங்கள் பகுதியில் ராணுவ உடையில் புகுந்த 4 பேர் ’அல்லாகூ அக்பர்’ என்று கூறியவாறு எங்களை நோக்கி சாரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அப்போது அனைவரும் பெஞ்சுக்கு அடியில் ஒளிந்து கொண்டோம். இதனைகண்டு அருகில் வந்த அவர்கள் ஒவ்வொருவராக வெளியே இழுத்து சுடத்தொடங்கினர். நான் ஒளிந்திருந்த பெஞ்சுக்கு கீழ் பகுதியிலும் தொடர்ந்து சுடத்தொடங்கினர். அப்போது 2 குண்டுகள் என் காலில் பாய்ந்தது. இனி உயிர் பிழைக்க வேண்டுமானால் இறந்தவர் போல் நடிக்கவேண்டும் என்று முடிவு செய்து, வலியை பொறுத்துகொண்டு இறந்தவன் போல் நடித்தேன்.
 
பின்னர் குண்டு பாய்ந்த காலுடன் வலியையும் பொறுட்படுத்தாமல் வெளியே வந்தேன். அப்போது ஒரு ராணுவ வீரர் என்னை பள்ளி பின் பக்கமாக ஓடும்படி கூறினார். இதனால்தான் நான் உயிர் தப்ப முடிந்தது என்று அந்த மாணவன் கூறினார்.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments