Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி விற்பனையை தடை செய்ய வேண்டும்: மனம் நொந்த மக்களின் கோரிக்கை

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (13:16 IST)
அமெரிக்காவில் நிகழ்ந்த தொடர் துப்பாக்கிச் சுடு சம்பவத்தால் அந்நாட்டில் வால்மார்ட், துப்பாக்கி விற்பனையை தடை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வால்மார்ட் சீலோ விஸ்டா மாலில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 20 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஒரு கிளப்பில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 9 பேர் பலியானார்கள்.

மேலும் அதற்கு அடுத்த நாள் ஞாயிறு அன்று, சிகாகோ நகரின் பூங்கா ஒன்றிற்கு காரில் வந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை சுட்டதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களினால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் மனவேதனைக்கு உள்ளாகினர்.

இதனை தொடர்ந்து துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வரும் வால்மார்ட் கடைகளுக்கு ஏற்கனவே துப்பாக்கி விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில், தற்போது பொது மக்கள், வால்மார்ட் நிறுவனம் துப்பாக்கி விற்பனையை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த கோரிக்கைக்கு இன்னும் அந்த நிறுவனம் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments