Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் வெள்ளப்பெருக்கு: டஜன் கணக்கானோர் மாயம்!

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (18:25 IST)
ஜப்பானின் மேற்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக குறைந்தது 27 பேர் பலியாகியுள்ளனர். டஜன் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
 
வியாழக்கிழமை முதல் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஹிரோஷிமா பிரதேசத்தில் பலரும் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 15 லட்சம் மக்கள் வீட்டை விட்டு வெளியேற ஆணையிட்டுள்ள நிலையில், இன்னும் 30 லட்சம் பேர் வீட்டைவிட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
தேடுதல் மற்றும் மீட்புதவி நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் சிப்பாய்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில் நிகழ்ந்துள்ள நிலச்சரிவால் சிலர் உயிரோடு புதையுண்டுள்ளதாக ஜப்பானின் கியோடோ நியூஸ் முகவை செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஜப்பானின் தலைநகரான டேக்கியோவின் மேற்கில் சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மோட்டோயாமா நகரில், வெள்ளிக்கிழமை காலையில் இருந்து சனிக்கிழமை காலை வரை 583 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக ஜப்பானின் வானிலை முகவை கூறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments