Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது வரலாறு - இது அமைதிக்கான துவக்கம்: வடகொரிய அதிபர்...

Webdunia
சனி, 28 ஏப்ரல் 2018 (11:25 IST)
வட கொரியா, தென் கொரியா அதிபர்கள் உச்ச மாநாடுக்காக சந்தித்துக்கொண்டனர். அந்த மாநாட்டில் கொரிய தீபகற்பத்தில் இனிமேல் போர் ஏற்படாது என்று இரு நாட்டு அதிபர்களும் உறுதியளித்துள்ளனர்.
 
வடகொரிய அதிபர் கிம் காலை 9.30 மணிக்கு பன்முன்ஜோமுக்கு சென்றார். எல்லையில் காத்திருந்த தென்கொரிய அதிபர் வடகொரிய அதிபரை பரவேற்றார். பின்னர் கிம் வேண்டுகோளை ஏற்று வடகொரிய மண்ணில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் கால் பதித்தார்.
 
அதன்பின் அமைதி இல்லத்தில் மாநாடு தொடங்கியது. இருநாட்டு அதிபர்களும் காலையில் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர். மதிய உணவுக்கு பிறகு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். 
 
அதன் பின்னர் இரு அதிபர்கள் பேசியது பின்வருமாறு,
 
வடகொரிய அதிபர், இரு கொரியாவும் ஒன்றிணைவதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும். எல்லையில் நான் கடந்த வந்த சாலையை இருநாட்டு மக்களும் பயன்படுத்த வேண்டும். போர் அபாயம் இன்றி அமைதி யாக வாழ வேண்டும் என்று தெரிவித்தார்.
 
தென்கொரிய அதிபர், கொரிய தீபகற்பத்தில் இனிமேல் போர் அபாயம் இல்லை. இப்போது அமைதிக்கான புதிய யுகம் தொடங்கியுள்ளது. அணு ஆயுதம் இல்லாத கொரிய தீபகற்பத்தை உருவாக்க நானும் அதிபர் கிம்மும் உறுதி பூண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments