Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவிலியரை உயிருடன் எரித்து கொன்ற நோயாளி!!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (10:17 IST)
70 வயது மதிக்க தக்க நோயாளி ஒருவர் தன்னை பார்த்துக்கொள்ள பணி அமைக்கப்பட்டிருந்த செவிலியரை எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
இஸ்ரேல் தலைநகர் டெல்அவில் பகுதியில் உள்ள ஹோலோன் நகர சுகாதார மையத்தில் 70 வயது நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.
 
அவருக்கு தோவா கராரோ (56) என்ற செவிலியர் உதவியாளராக இருந்தார். நோயாளிக்கு தோவா கராரோ மாத்திரை வழங்கி கொண்டிருந்தார்.
 
அப்போது எதிர்பாராத விதமாக நோயாளி எரியும் தன்மை கொண்ட ஒரு திரவத்தை செவிலியர் மீது வீசிவிட்டு காரில் தப்பி ஓடி விட்டார்.
 
இதனால் நர்சு உடலில் தீப்பிடித்து எரிந்தது. உடனே தீயை அணைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
தப்பி ஓடிய நோயாளி கைது செய்யப்பட்டார். அவர் மனநோய் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. சிகிச்சையில் திருப்தி இல்லாததால் செவிலியரை எரித்துக் கொன்றது விசாரணையில் தெரிய வந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

பெங்களூரை அடுத்து குஜராத்திலும் பரவிய எச்.எம்.பி.வி. பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு;

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்; பெண் வாக்காளர்கள் அதிகம்!

ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழக மரபைதான் கடைப்பிடிக்கணும்! - தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்!

கவர்னரின் செயல் கூட்டாட்சி மாண்பிற்கே விரோதமானது: ஆதவ் அர்ஜூனா

அடுத்த கட்டுரையில்
Show comments