Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்தால், மோடியின் மூச்சை நிறுத்துவேன்: பயங்கரவாதி மிரட்டல்

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (08:13 IST)
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் ‘நீரை தடுத்தால் பிரதமர் மோடியின் மூச்சை நிறுத்துவேன்’ என அந்நாட்டின்  பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சய்யீத் மிரட்டல் விடுத்துள்ளார். இது   வீடியோ பாகிஸ்தானில் வைரலாகி வருகிறது.
 
பாகிஸ்தான், இந்தியா இடையே நதிகளை பங்கிட்டு கொள்வதில் ஒரு ஒப்பந்தம் உள்ளது. இதில், இந்தியாவில் முழுமையாகப் பயன்படுத்தாத உபரி நீர் ஜீலம், சீனாப், ராபி, பியாஸ் மற்றும் சட்லெட்ஜ் ஆகிய 5 நதிகளின் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறது.
 
புல்வாமா தாக்குதலுக்கு பின் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, காஷ்மீரில் மூன்று அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுப்போம் என கூறியிருந்தார். இதில் பியாஸ் மற்றும் சட்லெட்ஜ் நதிகளின் நீரை யமுனை நதிக்கு திருப்பி விடுவதாகவும் கட்கரி கூறினார். இதை கேட்டு பாகிஸ்தானில் இருக்கும்  பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றான ‘ஜமாத்-உத்-தாவா’வின் தலைவரான ஹபீஸ் சய்யீதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
 
அந்த வீடியோவில் சய்யீத் தனது பேச்சில், ‘நீ பாகிஸ்தானுக்கு வரும் நீரை நிறுத்துவாயா? காஷ்மீரில் அணைகட்டி நீரைத் தேக்குவாயா? அதை எங்களுக்கு இல்லாமல் செய்வாயா? எல்லை மீறி நீ பேசிவிட்டு அதற்கு நாம் பதிலளிக்காமல் மவுனம் காக்க வேண்டும் என விரும்புகிறாயா? நீ நீர்வரத்தை தடுத்தால் நீ மூச்சு விடுவதை நான் தடுப்பேன்’ எனக் கூறியுள்ளார்.
 
சய்யீதின் இந்த மிரட்டலினால் அவருக்கு பாகிஸ்தானியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடிவருகிறது. 26/11, குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது இவரும், இவரது இயக்கத்தினரும் தான். இந்த பயங்கரவாத இயக்கத்துக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments