Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பாகிஸ்தான் எங்களது ஈடு இணையற்ற நண்பன்' - சீனா புகழாரம்

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2015 (17:44 IST)
பாகிஸ்தான் எந்த காலத்திலும் எங்களது ஈடு இணையற்ற நண்பன் என்று சீனா புகழாரம் சூட்டியுள்ளது.
 
சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத் தலைமை அதிகாரி ரஹீல் ஷெரீப் சீன வெளியுறவுத் துறை அதிகாரி வாங் யி-உடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
 

 
இது குறித்து பொது உறவுகளுக்கான உள்சேவை பொது மேலாளர் மேஜர் ஆசிம் பாஜ்வா பேசுகையில், “பாகிஸ்தான் எந்த காலத்திலும் எங்களது ஈடு இணையற்ற நண்பன் என்றும் இரு நாடுகளும் பரஸ்பரம் தங்களது கவலைகளை ஒரே சமூகத்தின் பகுதியாக கருதும்” என்று வாங் யீ கூறியதாக குறிப்பிட்டார்.
 
மேலும் ஜெங்செங் குறிப்பிடுகையில், "பாகிஸ்தான் சீனாவின் மிகவும் நம்பகமான கூட்டாளி. பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானின் அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் சீனா அரசு உதவ தயாராக இருக்கிறது” என்றார்.
 
சீனா சென்றுள்ள பாகிஸ்தானின் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்,  இந்தப் பயணத்தின்போது சீனா, பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ரீதியிலான முக்கிய நடவடிக்கைகள் சில எடுக்கப்பட்டுள்ளன.
 
அவற்றுள் முக்கியமாக, நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, பாதுகாப்பு கொள்கை, பாதுகாப்பு விவகாரங்களில் தகவல் பரிமாற்றம் ஆகியவை குறித்து சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments