Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நூற்றாண்டுகளில் வாழ்ந்த, உலகின் மிக வயதான பெண் மரணம்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2015 (14:16 IST)
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண் என்று கருதப்பட்ட  மிசாயோ ஒகாவா தனது 117 ஆவது வயதில் மரணமடைந்தார்.


 

 
ஜப்பானில் உள்ள ஒசாகாவைச் சேர்ந்தவர் மிசாயோ ஒகாவா. இவர் உலகிலேயே மிக வயதான பெண் என்ற பெருமை பெற்றவர். இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
 
கடந்த மாதம் இவர் தனது 117 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த அவர் ஒசாகாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
அவருக்கு 3 பிள்ளைகள், 4 பேரப்பிள்ளைகள், 6 கொள்ளு பேரர்கள் உள்ளனர். 1898 ஆம் ஆண்டு பிறந்த இவர் 3 நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments