Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து ராணியின் மெய்க்காப்பாளரை சீண்டிய சுற்றுலா பயணி: வீடியோ இணைப்பு

Webdunia
சனி, 3 அக்டோபர் 2015 (09:53 IST)
இங்கிலாந்து அரசக் குடும்ப மெய்க்காப்பாளரை சீண்டிய சுற்றுலாப் பயணி ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக  பரவி வருகிறது.


 
 
இங்கிலாந்தின்  பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அரசு குடும்பத்துக்கு சொந்தமான மெய்க்காவல்  படை பாதுகாப்பை வழங்கி வருகிறது.
 
பணி முடிந்து அரண்மனையில் இருந்து வெளியேறும் மெய்க்காவல் படை நிகழ்த்தும் அணிவகுப்பை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பர். அந்த வகையில் நேற்று ஒரு மெய்க்காப்பாளர் அரண்மனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
 
அப்போது அங்குவந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அந்த மெய்க்காப்பாளரை போல நடந்து செல்வது என அவரை தொடர்ந்து பின்சென்றார்.
 
ஒரு கட்டத்தில் மெய்க்காப்பாளரது தோலில் சுற்றுப்பயணி கைவைக்க, ஆவேசமடைந்த அந்த வீரர் தான் கையில் வைத்திருந்த தானியங்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சுற்றுலா பயணி பின்னங்கால் பிடறியில் அடித்த படி தலைதெறிக்க ஓடினார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Show comments