Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு தண்டனை

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (15:17 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா நாடு 7 பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளதால், அந்நாட்டின் தலைவர் போட்டியில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு தண்டனை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.


 

 
ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற வடகொரியா நாட்டினரிடம் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், கண்டிப்பாக குறைந்தபட்சம் 17 பதக்கங்களையாவது வென்று வர வேண்டும் என்று கூறினாராம்.
 
ஆனால் வடகொரியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் திரும்பியது. வடகொரியாவின் எதிரி நாடான தென்கொரியா 9 தங்கம் உள்பட 21 பதக்கங்களை குவித்தது.
 
இதில் ஆத்திரம் அடைந்த அந்நாட்டின் தலைவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களை தண்டிக்கும் விதமாக அவர்களை நிலக்கரி சுரங்கங்களில் கூலித்தொழிலாளியாக வேலைக்கு அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அதேபோன்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு வீடு, கார் போன்ற பரிசுகள் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.    

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments