Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடித்து சிதறிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை; 50 பேர் பலி! – நைஜீரியாவில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (09:02 IST)
நைஜீரியா நாட்டில் சட்டவிரோதமாக இயங்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெடித்ததில் 50 பேர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் நைஜீரியாவின் சில பகுதிகளில் அரசுக்கு தெரியாமால் சட்டவிரோதமாக சில எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் செயல்படுவதாக கூறப்படுகிறது.

அவ்வாறு செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில் நேற்று முன்தினம் திடீரென பெரும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விபத்தில் 50 பேர் பலியான நிலையில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments