Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியின் ஆயுட்காலம் இன்னும் 9 மாதங்கள் தான்: அதிர்ச்சி தகவல்!!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2017 (11:24 IST)
2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பூமி முற்றிலும் அழிந்து நாசமாகும் என்று விஞ்ஞான எழுத்தாளர் டேவிட் மேட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 
 
டேவிட் மேட் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் எழுதியுள்ள பிளாணட் எக்ஸ் - தி 2017 அரைவல் ( Planet X – The 2017 Arrival ) என்ற புத்தகத்தில் சூரியனைப் போன்றதொரு கோளான நிபிரு (Nibiru)  பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்றும் அந்த கோள் பூமியின் தென் துருவத்தில் வருகிற அக்டோபர் மாதம் மோதி பெரும் நாசத்தை விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த மோதல் காரணமாக பூமி தவிடுபொடியாகிவிடும் என்றும் அவர் அதிர்ச்சி அளிக்கும் தகவலை கூறியுள்ளார்.
 
தீக்கோளமான நிபிரு கோள் சூரியக் குடும்பத்தின் விளிம்பில் உள்ளது என்றும் அப்படி ஒரு கோள் இல்லை என்றும் விஞ்ஞானிகள் இருதரப்பு கருத்துக்களை கூறிவருகிறார்கள். 
 
ஆனால், டேவிட் மேட் பூமியை விட பலமடங்கு பெரிய கோளான நிபிரு பல ஆண்டுகளாக பூமியை நோக்கி பயணிக்கிறது என்றும் வருகிற அக்டோபர் மாதம் பூமியின் மீது அது மோதும் என்றும் சொல்கிறார். 
 
ஆனால், டேவிட்டின் இந்த கணிப்பை நாசா மறுத்துள்ளது. நிபிரு கோள் வெறும் கற்பனை என்று தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments