Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் நேட்டோ; உக்ரைனுக்கு அழைப்பு! – கடுப்பில் ரஷ்யா!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (11:49 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் நேட்டோ மாநாட்டிற்கு உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் முன்னதாக நேட்டோ அமைப்பில் இணையவிருந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடர்ந்தது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த போரினால் உக்ரைனின் பல பகுதிகள் நாசமாகியுள்ளன. மக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஸ்பெயினில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுத்துள்ளது நேட்டோ. ஏற்கனவே ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதற்கு உக்ரைன் நேட்டோவில் இணைய உள்ளது முக்கிய காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த அழைப்பு ரஷ்யாவை மேலும் உக்கிரமடைய செய்யும் என்றும், போர் வேகமடையும் என்றும் அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments