Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு அம்மை வைரஸ்...தென் கிழக்கு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (21:51 IST)
இந்தியாவில்  குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ள  நிலையில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த நோய் அறிகுறி கண்டறியப்பட்டாலும், தற்போது ஆப்பிரிக்க தொடர்பு இல்லாமலே பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.,

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், உலகம் முழுவதும் 58 நாடுகளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  4  நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு  நட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மைத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில்,இந்தியாவில்  குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ள  நிலையில்ம் தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பில் தென் கிழக்கு ஆசிய பகுதி இயக்குனர் பூனம் சிங்,  குரங்கு   நோய்த்தொற்றைக் குறைக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு உதவும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments