Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு லிட்டர் பெட்ரோலில் ஆயிரம் கிலோ மீட்டர் ஓடக்கூடிய கார் கண்டுபிடிப்பு

Webdunia
வியாழன், 19 மார்ச் 2015 (12:24 IST)
துபாயில் ஒரு லிட்டர் பெட்ரோலில் ஆயிரம் கிலோ மீட்டர் ஓடக்கூடிய நவீன ஒன்று கார் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
 
‘ஈகோ துபாய் ஒன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த காரின் மொத்த எடை வெறும் 25 கிலோ மட்டும்தான். இரண்டு மீட்டர் நீளம், அரை மீட்டர் அகலம், அரை மீட்டர் உயரத்தில் இந்த நவீன காரை வடிவமைத்துள்ளனர். 
 

 
துபாய் நாட்டிலுள்ள ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இந்த அதிநவீன காரை கண்டுபிடித்துள்ளனர்.  கோலாலம்பூரில் வரும் ஜுலை மாதம் நடைபெறும் அரியவகை கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியில் இந்த நவீன ‘ஈகோ துபாய் ஒன்’ காரின் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்த திட்டத்தின் தலைமை மாணவர் அஹ்மத் கமிஸ் அல் சுவைதி, ”பெட்ரோல் நீண்ட நாட்களுக்கு நிலைத்து கிடைக்கப் போவதில்லை. எனவே சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத நவீன போக்குவரத்துக்கு இத்தகைய கண்டுபிடிப்புகள் மிகவும் அவசியமானது” என்றார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments