Webdunia - Bharat's app for daily news and videos

Install App

118 பயணிகளுடன் கடத்தப்பட்ட லிபியன் விமானம்

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2016 (18:41 IST)
லிபியாவின் சபா நகரில் இருந்து திரிபோலி என்ற நகருக்கு புறப்பட்ட லிபியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
விமானத்தில் வந்த இருவர்தான் அந்த கடத்தல் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அந்த விமானம் மால்டா விமான நிலையத்தில் இன்று காலை 11.30 மணியளவில் தரை இறக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த தீவிரவாதிகளின்  பிடியில் பயணிகள் சிக்கியுள்ளனர்.
 
அந்த விமானத்தில் மொத்தம் 7 விமான பணியாளர் மற்றும்  மொத்தம் 118 பயணிகள் இருந்தனர்.  அந்த விமானத்தை வெடிகுண்டு மூலம் வெடிக்கச் செய்வோம் என அந்த தீவிரவாதிகள் மிரட்டி வருவதாகவும், அதில் ஒருவர் கை எறி குண்டை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இதையடுத்து, மால்டா விமான நிலையத்தில் அதி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், விமானத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை தீவிரவாதிகள் வெளியே அனுப்ப ஒத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments