Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு முத்தம் கொடுத்த இஸ்ரேல் பிணைக்கைதி! - ஏன் தெரியுமா?

Prasanth Karthick
திங்கள், 24 பிப்ரவரி 2025 (12:18 IST)

ஹமாஸ் கிளர்ச்சிக்குழுவால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதி விடுதலையாகும்போது அவர்களை முத்தமிட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில் அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகியுள்ளது. அதன்படி ஹமாஸ் குழுவினர் தாங்கள் பிடித்துச் சென்ற இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றன.

 

அந்த வகையில் சமீபத்தில் இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டபோது ஒமர் ஷெம் தோவ் என்பவரும் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் தங்களை பிடித்து வைத்திருந்த ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இருவருக்கு முத்தம் கொடுத்து விடைபெற்றார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

 

இந்நிலையில் ஷெம் தோவிடம் அவர் ஏன் அப்படி செய்தார் என கேட்டபோது அவ்வாறு செய்யுமாறு ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் தன்னை கட்டாயப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். அதை பார்க்க பிரியாவிடை பெறுவது போல தெரிவதன் மூலம் தாங்கள் பிணைக்கைதிகளை நட்புறவாக நடத்தியதான தோற்றத்தை உருவாக்க ஹமாஸ் குழுவினர் முயன்றது இதன்மூலம் தெரிய வந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா பிரசாந்த் கிஷோர்?

ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு முத்தம் கொடுத்த இஸ்ரேல் பிணைக்கைதி! - ஏன் தெரியுமா?

ஜெர்மனி தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி.. எலான் மஸ்க் ஆதரித்த கட்சியும் தோல்வி..!

ஜெயலலிதா வீட்டிற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. பிறந்த நாளில் செய்த மரியாதை..!

பியூட்டி பார்லர் சென்று வந்த அக்கா-தங்கை மணமக்களுக்கு நிகழ்ந்த விபரீதம்.. நின்று போன திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments