Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டடத்திலிருந்து தூக்கி வீசி மரண தண்டனை கொடுக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள்

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (15:45 IST)
சிரியாவின் பெரும் பகுதியை ஆக்ரமித்துள்ள ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஒருவரை கட்டடத்தில் இருந்து தூக்கி வீசி மரண தண்டனையை நிறைவேற்றியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஷரியா நீதிமன்றத்தில் ஓரினச் சேர்க்கையாளர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவரது கை, கால்கள் கட்டப்பட்டு மாடியின் மீது படுக்க வைக்கப்பட்டார்.
 
கீழே ஏராளமானோர் திரண்டு நிற்கிறார்கள். ஐஎஸ் தீவிரவாதிகள் அந்த மனிதரை மாடியில் இருந்து கீழே வீச, தரையில் விழுந்த அந்த நபர் மீது அங்கே கூடியிருந்த மக்கள் கற்களை வீசுகின்றன. எந்த சலனமும் இல்லாமல் அந்த உடல் கிடக்கிறது.
 
இந்த புகைப்படங்களை ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இதே போல ஏற்கனவே ஒருவருக்கு கடந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments